அரசு மதுபானக்கடையில் மது பாட்டில்களை மட்டும் எடுத்துச்சென்ற மதுக்கொள்ளையன்.. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை

அரசு மதுபானக்கடையின் பூட்டை உடைத்து பொருமையாக டின் பீர் அருந்திய பின்பு தனக்கு தேவையான மது பாட்டில்களை மட்டும் எடுத்துச்சென்ற மதுக்கொள்ளையன். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகின்றது. இன்று காலையில் வழக்கபோல் அரசு மதுபானக்கடையை 10 மணிக்கு ஊழியர்கள் திறக்க வந்த போது கடையில் நுழைவாயில் பூட்டு உடைபடாமல் இருந்த நிலையில் கடையில் பூட்டு மட்டும் இல்லாமல் இருந்த்து.

இந்நிலையில் கடையை திறந்து பார்த்த போது சிசிடிவி கேமராகக்கள் வேறு பக்கம் திருப்பி விடப்பட்டு இருந்த்து. மேலும் உள்லே உள்ள மதுபாட்டிகள் கணக்கெடுத்த போது ஒரு டின் பீர் பாட்டில் மற்றும் 4 விலை உயர்ந்த மதுபாட்டிகள் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறைக்கு கொடுத்த தகவில் அடிப்படையில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அரசு மதுபானக்கடையின் பூட்டை உடைத்து மதுபாடிகளை கொள்ளையடித்த கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் கெல்மெட் அணிந்து இரவு அரசு மதுபானக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மதுக்கொளையன் முதலில் உள்ளே இருந்து சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து விட்டு பின்பு அங்கு இருந்த டின் பீர் ஒன்றை நிதானமாக குடித்து விட்டு பின்பு கொள்ளையனுக்கு தேவையான விலை உயர்ந்த 4 மதுபாட்டிகள் மட்டும் எடுத்து சென்றுள்ளான் என்பது உறுதியாகி உள்ளது. அரசு மதுபானக்கடையின் பூட்டை உடைத்து டின் பீர் குடிதுக்கொண்டே மதுபாட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சமபவத்தால் சிறிது நேரம் மது விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு துவங்கியது.

Translate »
error: Content is protected !!