அறிவிப்பு செய்து கொண்டும் வீடியோ ஆடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட  மைக் செட் உரிமையாளர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை  சேர்ந்த ஜெயசந்திரன் என்ற  ஜெசிந்திரன் 42. கொடைக்கானல் மைக்செட் ஆடியோஸ் என்ற நிறுவனத்திற்கு உரிமையாளராக இருந்துள்ளார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு வீடியோவும், தனக்குத்தானே இறுதி ஊர்வலம் பற்றிய அறிவிப்பு செய்து ஒரு ஆடியோவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

நேற்று  இரவு ஒரு மணிக்கு பின்னர் கொடைக்கானல் ஏரியில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த ஆடியோ மற்றும் வீடியோவால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து கொடைக்கானல் காவல் துறையினர்  பல இடங்களில் மாயமான ஜெசிந்தரனை தேடினர். இந்நிலையில் கொடைக்கானல் ஏரியின் கரை பகுதியில் இவரது காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானல் ஏரியில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இனைந்து  இரண்டு படகுகள் மூலம் நான்குமணி நேரமாக தேடினர் . நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஜெயசந்திரன் என்னும்  ஜெசிந்திரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொடைக்கானல் காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் அதிமுக பிரமுகராக இருப்பதாலும், மைக்செட் சங்கத்தில் தலைவராக இருப்பதாலும் கொடைக்கானல் ஏரி அருகே பொதுமக்களும், சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கட்சி பிரமுகர்களும் கூடினர்

Translate »
error: Content is protected !!