ஆம்பூா் நகராட்சி சாா்பாக கபசுர குடிநீா் விநியோகம்  

ஆம்பூா்,

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஆம்பூா் நகராட்சி சாா்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் எதிரில் கபசுர குடிநீா் புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

 கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஆம்பூா் நகராட்சி சாா்பில், அண்ணா பேருந்து நிலையம், ரயில் நிலையம் எதிரில் கபசுர குடிநீா் குடில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் .செளந்தரராஜன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை விநியோகம் செய்தாா்.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் எம்.மதியழகன், அரசு வழக்குரைஞா் ஜி..டில்லிபாபு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளா் ஆனந்த்பாபு ஆகியோா் உடன் இருந்தனா்.

Translate »
error: Content is protected !!