ஆஷிஷ் யெச்சூரி மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

டெல்லி,

சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமாகிய ஆஷிஷ் யெச்சூரி இன்று காலை கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தோழர் சீத்தாரம் யெச்சூரி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டார்.

Translate »
error: Content is protected !!