இந்தியாவின் தடுப்பூசிகளின் உற்பத்தி உயர்ந்த அளவில் உள்ளன…ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு..!

நியூயார்க்,

உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறனை உலகின் சொத்து என்றும் ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் பாராட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய .நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், இந்தியாவின் தடுப்பூசிகளின் உற்பத்தி உயர்ந்த அளவில் உள்ளது. அதற்காக நாங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

இந்தியா உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரம் சாத்தியம் என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது அவசியம். இந்தியாவின் உற்பத்தித் திறன் உலகின் சிறந்த சொத்து என்று எண்ணுகிறேன். அது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

55 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு இந்தியா பரிசளித்துள்ள நிலையில், வாராந்திர மாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ஓமான், கேரிகாம் நாடுகள், நிகரகுவா, பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை பரிசளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியான கவி அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவிற்கு 1 கோடி டோஸ் தடுப்பூசியையும், ஐக்கிய நாடுகளின் சுகாதார ஊழியர்களுக்கு 10 லட்சத்தையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!