இந்தியாவில் கடந்த ஓரு நாளில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 9 ஆயிரத்து 788 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 492 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 715 ஆக உயர்ந்து உள்ளது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 55 ஆயிரத்து 555 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 87 லட்சத்து 18 ஆயிரத்து 517 ஆக உள்ளது.
Translate »
error: Content is protected !!