ஈரோடு வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் மாநிலச் செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோபி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் மிக அதிக அளவில் மகளிரையும், புதிய உறுப்பினர்களையும் கட்சியில் இணைக்க மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. வரும் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம். சிவக்குமார், கோபி நகர செயலாளர் ஜி.சி. சிவக்குமார், கோபி ஒன்றிய செயலாளர் என்.கே. பிரகாஷ், மாவட்ட மகளிரணி சுதா செல்வராஜ், என்.கே. சக்தி, மகளிர் அணி கலையரசி, என். பார்வதி, சாந்தாமணி, எ.ருக்குமணி, எஸ். மஹபூப்னிஷா, அஞ்சலி, பி. ஆனந்தி, எஸ். செல்வி, எ. அகிலாண்டேஸ்வரி, எம். ராஜேஸ்வரி, எம்.சாந்தி, பி. புஷ்பா, கே. மேகலா, எ.சரஸ்வதி வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் நவீன்குமார், ஐ டி நகர செயலாளர் நா. முத்துக்குமார் கொடிவேரி பேரூராட்சி நடராஜன், எஸ். சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்…

Translate »
error: Content is protected !!