எடப்பாடி பாம்பை விட விஷமிக்கவர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாம்பை விட விஷமிக்கவர் என்று திமுக தலைவர் மு..ஸ்டாலின் தெரிவித்தார். கொடும் வெயிலை விட கொடுமையிலும் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் ஸ்டாலின் பேசினார். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை, கெங்கவல்லி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மணிகண்டன் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மணிரத்தினம் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:- கொடும் வெயிலை விட கொடுமையிலும் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அந்த ஆட்சியை ஒழிக்கனும் என இங்கே ஆரவாரத்தோடு திரண்டிருக்கின்றீர்கள்.

இந்த அராஜக அதிமுக ஆட்சியை ஒழிக்க உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். நான் ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் அல்ல. என்றைக்கும் உங்களுடன் இருந்து உங்களுடைய பிரச்சனைக்காக வாதாடுகின்ற வகையில் ஆதரவு கேட்க வந்துள்ளேன். இவர் எப்படி இங்கு வந்து ஓட்டு கேட்க முடியும்?. கொளத்தூர் தொகுதியில்தானே போட்டியிடுகிறார் என நினைப்பீர்கள்.

ஆனால் தமிழ்நாடு முழுவதும் நான் முதல்அமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். மேற்கண்ட வேட்பாளர்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான் நான் வெற்றி பெற முடியும். ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் முதல்வராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி ஏதோ உளறி கிட்டு இருக்கிறார். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்ற கதை எல்லாம் சொன்னேன்.

அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்று உங்களுக்கு தெரியும். ஊர்ந்து போய் தானே. நான் ஏதோ வாய்க்கு வந்தபடி பேசுகிறேன் என்று நினைக்காதிங்க. தொலைக்காட்சியில், வாட்ஸ்-அப், சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்தீங்களே. ஆகவே இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் என்ன பாம்பா? பல்லியா? என கேட்கிறாரு. பாம்பு, பல்லிக்கு இருக்கிற வி‌ஷத்தை விட பழனிசாமிக்குதான் அதிகமான வி‌ஷம் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

Translate »
error: Content is protected !!