கள்ளக்காதலில் வாலிபர் குத்திக்கொலை !

சென்னை எழும்பூரில் மீன்பாடி வண்டி ஓட்டுநர் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்

சென்னை, துரைப்பாக்கம் கண்ணகிநகர், 16வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் () நண்டு (வயது 33).  

எழும்பூர் காவல் நிலையம் அருகில் உள்ள பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டிக்கொண்டு பிளாட்பாரத்தில் தங்கி பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். ஒரே ஒரு மகன் சிலம்பரசன் அவரது அத்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தோஷ்குமார் கண்ணகி நகரில் வசித்து வரும் இளவரசன் என்பவரது மனைவியிடம் நெருங்கிப்பழகியதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று குடிபோதையில் எழும்பூர், ஆதித்தனார் சாலையில் தனது மீன்பாடி வண்டியில் சந்தோஷ்குமார் படுத்திருந்தார். இரவு 11.30 மணியளவில் இளவரசன் மற்றும் அவரது கூட்டாளி அருண் ஆகியோர் அங்கு வந்தனர்.

ன் மனைவியிடம் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்புதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமாரின் முன்கழுத்தில் குத்தி விட்டு ஓடிவிட்டார்.

ரத்தவெள்ளத்தில் சந்தோஷ்குமார் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்ததும் எழும்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

 சந்தோஷ்குமாரை ஆட்டோவில் வைத்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு துாக்கிச்சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!