ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மோகன் பகான் கோவாவை வீழ்த்தியது

7-வது இந்தியன் சூப்பர் லீக் (.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் .டி.கே.மோகன் பகான்எப்.சி.கோவா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் வரவில்லை. 85-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மோகன் பகான் வீரர் ராய் கிருஷ்ணா கோலாக்கினார். முடிவில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசாபெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.

Translate »
error: Content is protected !!