கஞ்சா போதையில் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் கர்பினி பெண்கள் மாதாந்திர செக்கப், மற்றும் சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரமப சுகாதார நிலையத்தின் பின் பகுதியில் சிலர் மது மற்றும் கஞ்சா அருந்தி விட்டு தகாத வார்த்தகளால் பேசி சத்தம் போடுவதுமாக இருந்த நிலையில் இன்று கஞ்சா போதை ஆசாம இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்த நிலையில் போதையில் ஆரம்ப சுகாதார் மையம் முன்பாக தகாத வார்தகளால் கூறி சந்த போட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இருந்த வயதானவர் அவர்களை சத்தம் போட்ட போது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அவரை தாக முயற்சித்துள்ளார். இந்நிலையில் போதை ஆசாமி அரிவாளால் தாக்க முயற்சிக்கும்  சிசிடிவி காட்சிகளை வெளியாகி உள்ளது. மேலும் கெங்குவார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரியும் செவிலியர்கள் இச் சமபவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் போதை ஆசாமிகளால் தங்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அரிவாளை எடுத்து தாக்க வரும் நபரின் தந்தை ஒரு குண்டாஸ் ரவுடி செல்வம் எனவும், அவரது மகன் ரிசந்த் எனப்வர் போதையில் அரிவாளை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Translate »
error: Content is protected !!