காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், பொதுமக்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கிய போலீஸ் கமிஷனர்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு பணிகளை தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளுக்கு சென்று நேற்று பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.

மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்ற காவல் அதிகாரிகள், ஆளினர்களை நேரில் சந்தித்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கு வந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

தி.நகர் பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியினை பார்வையிட்டு காவல் துறையினர்க்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் விமலா, ஸ்ரீதர்பாபு, ஆயுதப்படை துணை ஆணையாளர்கள் சவுந்தர்ராஜன், ரவிச்சந்திரன், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!