குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் செய்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு  

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் முனியப்பன் வயது 36 கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துமாரி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து உள்ளார்.

அவர் இறந்த துக்கத்தால் இன்று குடிபோதையில் அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக இவர் செய்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும் சின்னமனூர் காவல்  நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சின்னமனூர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிபோதையில் செல்போன் டவர் மீது இருந்த முனியப்பன் இடம் சமாதான பேச்சுவார்த்தைகள் செய்து அவரை தீயணைப்புத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கயிறு கட்டி செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Translate »
error: Content is protected !!