குட்டை நீரில் இருந்து வெளியேறிய மீன்கள் 

தொடர் மழையால் குளம் குட்டையில் இருந்து சாலையோரம் ஓடையின் வழியாக மீன்கள் வெளியேறியது.

கடந்த ஒரு வாரமாக வடக்கு கிழக்கு பருவ மழை தமிழகத்தில் பெய்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள்  மழை நீர் நிரம்பி நீர்வரத்து வாய்க்கால் மற்றும் ஓடையின் வழியாக மழை நீர் தேங்கி நின்று நிரம்பி மதுகு மற்றும் களுங்கு வழியாக வழிந்து செல்கிறது.

இந்த நிலையில் குளம், குட்டை, ஏரியில் இருந்து நீர் நிரம்பிய ஓடையின் வழியாக உருண்டோடும் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டு துள்ளி சென்ற மீன்களை சாலையோரம் நடந்து சென்ற விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

Translate »
error: Content is protected !!