குப்பை அகற்றும் பணி துவக்கம் – உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதி புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு மக்களுக்கு  நேற்று கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கிய போது, அங்குள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பையாலும்துர்நாற்றத்தாலும் வாழ முடியாத சூழல் உள்ளதென அக்கா ஒருவர் கூறினார்.

இதையடுத்து நேற்றே சென்னை மாநகராட்சியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனே குப்பையை அகற்ற வலியுறுத்தினார் உதயநிதி ஸ்டாலின் . அதன்பேரில், குப்பை அள்ளும் பணி இன்று தொடங்கி நடைபெறுகிறது. குப்பை அகற்றும் பணியை நேரில் சென்றும் ஆய்வு செய்தார் உதயாநிதி ஸ்டாலின்.

Translate »
error: Content is protected !!