கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மிகவும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக  பெய்த  கனமழையால் நேற்று காலை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து கானப்பட்ட்து. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் பெய்த கனமழையால் அதிகாலை முதல்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பே கும்பக்கரை அருவியில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவிக்கு கீழே உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து குளங்கள், கண்மாய்களில் நீர் வேகமாக நிறைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!