குளத்துக்கரை முட்புதரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  இருவரில் ஒருவர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள மத்துவார்குளம் கண்மாயின் கரைப்பகுதியில் உள்ள கருவேல முட்புதருக்குள் சாராயம் காய்ச்சுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து,

தேவதானப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கெங்குவார்பட்டி பகவதி நகரைச்சேர்ந்த ராஜா மற்றும் அவரது நண்பர் சாராயம் காய்ச்சுவது பானைகளில் ஊரல் போட்டு இருப்பதை கண்டுபிடித்த போது அதில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் தப்பி ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்க்கு அதற்காக அங்கு தயார் செய்யப்பட்டிருந்த ஊரல் பானைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ராஜாவை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தேவதானப்பட்டிப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்த்ப்படும் ஊரல்களை கண்டறிய காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!