கூடலூரில் கணவருக்காக மது பாட்டில்கள் வாங்கிச் சென்ற மூதாட்டி.. வியந்த பொது மக்கள்

தேனி மாவட்டம்,

கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றார் வயதான மூதாட்டி. கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நீண்ட இடைவேளைக்குப் பிறகு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையில் ஆண்களுடன் வரிசையில் நின்று  தன்னுடைய கணவருக்காக  மது பாட்டில்களை வயதான மூதாட்டி வாங்கிச் சென்றார்.

மதுக்கடை வரிசையில் பெண் நின்றிருப்பது வியப்பூட்ட, கணவருக்காகத்தான் மது வாங்கிச் செல்கிறார் என்பது மக்கள் கவனத்தை ஈர்த்தது.

Translate »
error: Content is protected !!