கொடைக்கானல் அரசு மருத்துவமனையில்  போதிய உதவியாளர்கள் இல்லை.. அவதி படும் பொது மக்கள் ..!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய உதவியாளர்கள் இல்லாததால் சிகிச்சை பெற வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலைமை மருத்துவமனையாக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கீழ்மலை கிராம மக்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெரும் நிலை உள்ளது.

தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை  பெற மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் பொழுது உதவியாளர்கள் யாரும் இல்லாத சூழலில் செவிலியர்களே அவர்களை அழைத்து சென்றும் அதற்குரிய வேலைகளை பார்த்தும் வேறு தேவைகளுக்கும்  சிகிச்சை பெற வரும் மக்கள் உதவியாளர்கள் இல்லாத நிலையில் அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது.தொடர்ந்து  சிகிச்சை பெற வரும் மக்களுக்கு மருத்துவ உதவியாளர்களை தமிழக அரசு உடனே நியமிக்க வேண்டுமென கொடைக்கானல்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!