கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் கண்காட்சி

மலைகளின் இளவரசி கொடைக்கானல் தற்போது கோடை சீசன் காலம் ஆகும் நோய் தொற்று காரணமாக இந்த சீசன் காலத்தில் நடைபெற வேண்டிய மலர் கண்காட்சி கோடை விழா உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.,

சுற்றுலாப்பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படவில்லை, இதனால் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள பல லட்சம் வண்ண மலர்களை கண்டு ரசிப்பதற்கு ஆட்கள் இல்லை, இந்நிலையில் ஊட்டியில் இணைய வழியில் மலர் கண்காட்சியை ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோரானா விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

பல லட்சம் வண்ண மலர்கள் கொண்டு, கொரோனா நோய்க்கிருமிகள் போலவும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டன,

பல வண்ண மலர்களால் இந்த காட்சிகள் அனைத்தும் அமைக்கப்பட்டு உள்ளனபாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன அலுவலகத்தில் புல்தரையில் இந்த காட்சிகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை கண்டு ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மலர் காட்சியை அமைத்த பணியாளர்களை இதை ரசித்து சென்றனர் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் இந்த மலர் கண்காட்சியை வடிவமைத்தார்.

 

Translate »
error: Content is protected !!