கொரோனாவால் உயிரிழந்த இன்ஸ்பெக்டருக்கு டிஜிபி திரிபாதி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் திருஉருவப்படத்துக்கு டிஜிபி திரிபாதி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

சென்னை நீலாங்கரை போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் புருஷோத்தமனின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்திய பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

மேலும் இந்நிகழ்ச்சியில் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன், தென்சென்னை இணைக்கமிஷனர் பாபு, போக்குவரத்து இணைக்கமிஷனர் லட்சுமி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!