சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி; தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகல்

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பி.வி. சிந்து உள்பட இந்திய வீரர் மற்றும் வீராங்கனை குழுவினர் பாங்காங் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், மலேசிய வீராங்கனை கிசானோவை எதிர்த்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விளையாட இருந்தார்.

இதற்காக, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு பாசிட்டிவ் என வந்ததால், இந்திய வீராங்கனைகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மலேசிய வீராங்கனையுடனான போட்டி ரத்து செய்யப்பட்டதுடன், தொடரில் இருந்தும் விலகினார்.

இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாய்னா நேவால் தாய்லாந்து நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

Translate »
error: Content is protected !!