சாலைகளை சீரமைக்காததை கண்டித்து நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 8 வது வார்டு பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படாததால் மழைக்காலங்களில் மழை பெய்யும் நேரங்களில் மழை நீர் வடியாமல் சாலைகளில் தேங்கி உள்ளது.இது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியும் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தேங்கி உள்ள மழை நீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Translate »
error: Content is protected !!