கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கினாலும், அந்த நாடு கட்டுப்பாட்டைக் கொண்டு அதைக் கட்டுப்படுத்தியது. இருப்பினும், ஆசிய நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவுவதால், சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23 க்குள் தடுப்பூசி ஒரு தவணை செலுத்துமாறு சுக்சியாங்கில் வசிப்பவர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லை எனில், மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.