சென்னையில் கால்வாய் மூடி மேல் ஆட்டோ ஏறி கவிழ்ந்த்ததில் ஆட்டோ டிரைவர் பலி

சென்னை தி.நகரில் கால்வாய் மூடி மீது ஆட்டோ ஏறி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக பலியானார் சென்னை பெருங்குடி, சேம்பன் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஜெகதீசன் திநகர் சாதுல்லா தெரு, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் வந்தார்

அப்போது அங்கிருந்த கால்வாய் சிமெண்ட் மூடியை கவனிக்காமல் ஓட்டியதில் ஆட்டோ அந்த மூடி மேல் ஏறியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த அடிபட்டு ஜெகதீசன் மயங்கினார். 108 ஆம்புலன்ஸ்சை வரவழைத்து அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர், ஜெகதீசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!