சென்னையில் 29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி

சென்னையில் 29 வயது இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவுக்கு பலியானார்.

சென்னையில் உள்ள தி இந்து ஆங்கிலப்பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தவர் பிரதீப். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர்  நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்திரிகை உலகில் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014ம் ஆண்டு தனது 29 வயதில் பிரதீப் பத்திரிகை உலகில் இணைந்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராக பணியாற்றி விட்டு தற்போது தி இந்து வில் பணியாற்றி வந்தார். சென்னை மாநகராட்சி ஏரியா செய்திகளை அதிக அளவில் வெளியிட்டவர்‌. பாதாள சாக்கடையில் ஏற்படும் கழிவுகளை மனிதர்களே நேரடியாக இறங்கி அள்ளும் அவலத்தை தடுக்க பெரிதும் அக்கறை காட்டியவர். பிரதீபுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுத்து வந்தனர். பிரதீப்பின் மறைவு பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!