சென்னை காவலர்களின் உடல் நலன் பரிசோதனை செய்ய நடமாடும் கிளினிக்..!

சென்னை நகரில் காவலர்களுக்கு உடல் நலன் பரிசோதனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் கிளினிக்கை  சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையாளர் பிரதீப்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை நகரில் கொரானோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு சார்ந்த அமலாக்க பணியில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இதனால் மனதளவிலும், உடலளவிலும் சோர்வாகின்றனர்.

இதனால் அவர்கள் நலனில் கவனம் செலுத்தி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள காவலர் முதல் அதிகாரிகள் வரை அன்றாடம் முன்களப்பணியில் இருந்து வரும் காவல்துறையினருக்கு மருத்துவ வசதிகள், மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்களுடைய உடல் நலம் பேணி பாதுகாக்கப்பட்டு காவல் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை நகர போக்குவரத்து காவல் கமிஷனர் பிரதீப் குமார் சென்னை, அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டார். போக்குவரத்து காவலர்களுக்கான நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா

தடுப்பு தொகுப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை அண்ணாநகர் ஹோமியோபதி மருத்துவமனை இயக்குநர் கணேஷ், சென்னை நகர போக்குவரத்து காவல் இணைக்கமிஷனர் லலிதா லட்சுமி, துணைக்கமிஷனர் அசோக்குமார், ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்து பழனியப்பன் மற்றும் மருத்துவக் குழுவினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!