சென்னை, மயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம்: 3 வது மாடி பால்கனி இடிந்து விழுந்தது

சென்னை மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில், குயில் தோட்டம் குடிசைப்பகுதி மாற்று வாரியம் உள்ளது. இதில் உள்ள “ஜி “பிளாக்கின் மூன்றாவது மாடி பால்கனி இன்று அதிகாலை திடீரென பெயர்ந்து விழுந்தது.

கீழே விழுந்த இடத்தில் மக்கள் தூங்குவது வழக்கம்.  நல்லவேளையாக நேற்று இரவு மழை காரணமாக அங்கு யாரும் துாங்கவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 2,000 மக்கள் வசிக்கும் அப்பகுதியில் இச்சம்பவத்தால் பீதி நிலவுகிறது.

Translate »
error: Content is protected !!