சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் கொள்ளை

லாக்டவுனில் வீட்டைப் பூட்டி விட்டு ஊருக்கு சென்ற தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் வீடு புகுந்து மர்ம நபர்கள் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

சென்னை, விருகம்பாக்கம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (38). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த மார்ச் 23ம் தேதியன்று தனது மனைவியின் பிரசவத்துக்காக வீட்டைப் பூட்டி விட்டு தனது சொந்த ஊரான விருதுநகருக்கு சென்று விட்டார். அதன்பிறகு தமிழகத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் விஜயகுமார் சென்னைக்கு வராமலேயே ஊரிலேயே தங்கியிருந்தார். 6 மாதங்களுக்கப் பின்னர் நேற்று முன்தினம் விஜயகுமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 60 பவுன் தங்க நகைகள், ரொக்கம் 5,000 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!