செய்தித்துளிகள்…..

# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார்.

# தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

# கால்நடை மருத்துவ படிப்புகள்:-ஆன்லைனில் விண்ணப்பிக்க அக். 9-ம் தேதி கடைசி நாள்

# தஞ்சையில் பெரியார் சிலைக்கு அமைத்த இரும்பு கூண்டை அகற்றக் கோரி போராட்டம்

# நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

# கோவிட்-19 தொற்று அதிகமாக பரவிவரும் இக்காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அவர்களின் நலன் கருதி நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுப்பவர்களின் குறைகளை சம்பவ இடத்திற்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

# பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் 2வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி-நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவு

# மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிசான் திட்ட மோசடி தொடர்பாக 36 பேர் பணியிட மாற்றம்

# வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:-முதல்வர் பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.!!!

# ஒருபக்கம் கொரோனா-மறுபக்கம் புயல்!: மெக்சிகோவை சூறையாடிய கம்மா புயலால் 6 லட்சம் பேர் பாதிப்பு..!!

# அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து அறிவிப்பார்கள்?- மாலன் மூத்த பத்திரிகையாளர்

# சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வரும் 1873 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

# மீண்டும் ஸ்ரீலங்காவில் அனைத்து பங்கு விலை குறியீடு 7.65 சதவீதம் சரிந்து 462.99 புள்ளிகளாக காணப்பட்டுள்ளது

# மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு நவம்பர் 25க்குப் பிறகு அமெரிக்காவின் அவசரகால அங்கீகாரத்தை பெறும்

# பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்- செங்கோட்டையன்-இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது – செங்கோட்டையன்

# வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்: குழாய் பதிப்பு பணி தீவிரம்

# திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:

# திருச்சி: முசிறி அருகே உமையாள்புரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

# நாடெங்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதற்கு தவறுவதும் நடைமுறையாகிவிட்டது. இந்நிலைமை தொடருமானால், நாட்டின் பன்முகத் தன்மை அழிந்துவிடும் என எச்சரிக்கிறேன்.-நெடுமாறன்

# குலசை தசரா திருவிழாவில் காளி, அம்மன் வேடம் அணிந்து வரும் பக்தர்கள் கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்திட அனுமதிக்கவேண்டும் என்று ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.

# மத்திய பிரதேசத்தில் டேங்கர் லாரி ஒன்று பொருட்கள் ஏற்றி வந்த வாகனம் மீது மோதி விபத்தானதில் 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

# டெல்லி மற்றும் மும்பையிலிருந்து லண்டனுக்கு இடைநில்லா நேரடி விமானப்போக்குவரத்தை அறிமுகம் செய்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

# வங்கக் கடலில் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

# சொதப்பிய ஆர்.சி.பி பேட்ஸ்மேன்கள்; மிரட்டிய பவுலர்கள் – 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

# அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை; 245 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

# திருப்பத்தூர் அருகே கஞ்சா செடி வளர்ந்து வந்த நபர் கைது!. 300க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் விசாரணை

 

Translate »
error: Content is protected !!