டெல்டா மாவட்டங்களில் நிவர் புயல் கண்காணிப்புக்கு 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு

நிவர் புயல் தொடர்பாக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில்,

‘‘சென்னை நகரில் நிவர் புயல் தொடர்பாக கண்காணிப்புப் பணிக்கு தமிழக செயலாக்க பிரிவு கூடுதல் ஏடிஜிபி ஏகே விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல மாவட்டம் வாரியாக கீழ்கண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி அன்பு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரயில்வே ஐஜி வனிதா, விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிற்சிப்பிரிவு டிஐஜி சத்யப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்திற்கு வடக்கு மண்ட ஐஜி நாகராஜன், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பயிற்சி பிரிவு ஐஜி சாரங்கன், மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஐஜி லலிதாலட்சுமி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜி செந்தில்குமாரி, திருவாரூர் மாவட்டத்திற்கு ஆயுதப்படை ஐஜி தமிழ்ச்சந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் ஆகியோரை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!