டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

காலிறுதிப் போட்டியில், ஈரானின் மோர்டாசா சியாசி சேகா எதிர்கொண்டார். 2-1 என முன்னிலையில் இருந்த பஜ்ரங் புனியா, 4.56 நிமிடங்களில் ஈரானிய வீரரை வீழ்த்தி இரு தோள்களையும் தரையில் அழுத்தினார். இதனால் பஜ்ரங் புனியா வீழ்த்திய முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு தகுதியாகி உள்ளார்.

Translate »
error: Content is protected !!