தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் கோரோனோ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:-

தமிழகத்தில் நேற்று 270 ஆண்கள், 193 பெண்கள் என மொத்தம் 463 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 169 பேரும், கோவையில் 46 பேரும், செங்கல்பட்டில் 30 பேரும், திருவள்ளூரில் 33 பேரும், குறைந்தபட்சமாக தருமபுரி, பெரம்பலூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் பாதிப்பில்லை.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 49 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 389 ஆண்களும், 3 லட்சத்து 36 ஆயிரத்து 205 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்தப் பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 76 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 846 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்து வமனையில் 2 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இது வரையில் 12 ஆயிரத்து 478 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 469 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி னர்.

இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 89 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற் போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். தமிழகத்தில் 36-வது நாளாக நேற்று 749 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 43 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 114 பேருக்கு முதல்முறையாகவும், 45 ஆயிரத்து 594 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!