தமிழக முதலமைச்சர் செய்தி துளிகள்..

கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.A.பாப்பாசுந்தரம் அவர்கள் நேரில் சந்தித்து, 5.3.2021 அன்று நடைபெற உள்ள தனது பேரன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழை வழங்கினார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்கள் சந்தித்து தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழ் வழங்கினார்.

நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டயக் கணக்காளர் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற திரு..இசக்கிராஜ் (சேலம்) அவர்கள் பெற்றோருடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேசிய அளவில் தமிழகத்திற்கும், சேலம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த திரு..இசக்கிராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மாண்புமிகு முன்னாள் வேளாண் துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு, பிரபல பின்னணி பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் வி.சாந்தா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்குநடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் கைவிடப்படும் என அறிவித்தமைக்காகவும், அரசு ஊழியர்கள் வீடுகட்ட வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தியமைக்காகவும் தமிழக தலைமை செயலக சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தின் நலனை உயிராய் பேணி வளர்த்த ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளன்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை.

Translate »
error: Content is protected !!