தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய தாமதம்: உறவினர்கள் சாலை மறியல்

இராமநாதபுரம்

மாப்பிள்ளை பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியல்:

ராமநாதபுரம் அடுத்துள்ள கோட்டைமேட்டை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரியின் மகள் அபிராமி. இவரின் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர் மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தினால் இன்று காலை தனது வீட்டில் இளம்பெண் அபிராமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று மாலை வரை உடற்கூறு ஆய்வு செய்யாததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அரசு தலைமை அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ராமநாதபுரம்மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!