தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 75 வயது பாட்டியிடம் செயின் பறிப்பு..!

சென்னை புறநகா் பெருங்களத்தூரில் காரில் வந்து, வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த 75 வயதான பாட்டியை தாக்கி செயின் பறித்து சென்ற கொடுமை.

சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூா் காந்திநகரில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் காரில் வந்த மா்ம ஆசாமிகள் 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனா்.

சென்னை தாம்பரம் அருகே  பெருங்களத்தூா் காந்திநகரில் வசிப்பபா் சந்திரா(75).இன்று காலை 5.30 மணிக்கு சந்திரா வீட்டு வாசலை பெருக்கி தண்ணீா் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாா். அப்போது காா் ஒன்று வீடு அருகே வந்து நின்றது.

காரிலிருந்த ஆசாமி ஒருவன் சந்திராவை அழைத்து முகவரி கேட்டாா்.அப்போது காரிலிருந்த மற்றோரு ஆசாமி மின்னல் வேகத்தில் சந்திரா அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு, சந்திராவை கீழே பிடித்து தள்ளிவிட்டு,மா்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென்றனா்.காா் பெருங்களத்தூா் காந்திநகரிலிருந்து முடிச்சூா் சாலை நோக்கி மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

இதையடுத்து சந்திரா சாலையில் கிடந்து கதறினாா்.தாயின் கதறல் சத்தம் கேட்டு மகள் சூடாமணி வீட்டிற்குளிருந்து வெளியே ஓடிவந்து பாா்த்தாா்.தாய் செயினை பறிகொடுத்துவிட்டு சாலையில் விழுந்து கிடந்தாா்.கொள்ளையா்களுடன் போராடியபோது, சந்திராவின் ஜாக்கெட்டை கிழித்து கொள்ளையா்கள் செயினை அறுத்து சென்றிருந்தது தெரிந்தது. உடனே அக்கம்பக்கத்து வீட்டினரும் விரைந்து வந்தனா் .கிழே விழுந்ததில் சிராய்ப்பு காயங்களடைந்த சந்திராவுக்கு முதலுதவி சிகிச்சையளித்தனா்.

அதோடு பீா்க்கன்காரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனா். போலீசாா் விரைந்து வந்து விசாரணை நடத்துகின்றனா். போலீசாா் விரைந்து வந்து விசாரணை நடத்துகின்றனா். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கின்றனா். கடந்த வெள்ளிக்கிழமை காலை பல்லாவரத்தில் 8 மாத கா்ப்பிணி பெண்ணை சாலையில் ரதரதவென்று இழுத்து சென்று செயின் பறிக்க வந்த பரபரப்பு அடங்குவதற்குள்,பெருங்களத்தூரில் அதிகாலை காரில் வந்து வீட்டில் கோலம் போட்ட 75 வயது பாட்டியை தாக்கி செயின் பறித்துவிட்டு காரில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!