தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவுமென கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!