100ஆண்டு பழைய வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுப்பையா என்பவருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது.

இந்நிலையில் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்ற நிலையில் அந்த 100 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது. இந்நிலையில் பக்கத்து  வீட்டின் முன்பு படியில் அமர்ந்து இருந்த ஈஸ்வரி (50) என்ற பெண் மீது விழுந்தது.

இந்நிலையில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். மேலும் காயமடைந்த ஈஸ்வரியை அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த ஈஸ்வரியை மீட்டு பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும்  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

Translate »
error: Content is protected !!