நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகராக உள்ளவர், சியான் விக்ரம். தற்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.
தகவல் அறிந்து நடிகர் விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் சென்ரு, தீவிர சோதனை செய்தனர். இதன் முடிவில், அது வதந்தி என்று தெரிய வந்தது. எனினும், யார், எதற்காக வெடிகுண்டு புரளியை விடுத்தனர் என்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.