நாட்டிலேயே 2வது சிறந்ததாக சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் தேர்வு!

நாட்டிலேயே இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக, சேலம் நகரில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் மணிப்பூர், தமிழ்நாடு, அருணாச்சலப்பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், கோவா, அந்தமான் நிக்கோபார், சிக்கிம், தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 10 காவல் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.

இதில் முதல் இடத்தை மணிப்பூரில் உள்ள காவல் நிலையம் பெற்றுள்ளது. அடுத்த இடம், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பெற்று, சிறப்பை சேர்த்துள்ளது. அருணாசல பிரதேசத்தின் சங்லாங் நகரில் உள்ள கர்சாங் காவல் நிலையம் 3வது இடத்தில் உள்ளது.

சொத்து தொடர்பான குற்றங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், காணாமல் போனவர்கள் அடையாளம் தெரியாத உடல்களை கண்டறிதல் போன்றவற்றை கையாளுவதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!