பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,404 ஆக உயர்ந்துள்ளது.

பாரிஸ்,

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.

தற்போது பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது . இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்து 24 ஆயிரத்து 321 ஆக உள்ளது.

ஒரே நாளில் 313 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,404 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 10.77 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!