பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை,

இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட் மூலம் அடுத்தமாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள்.

நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

இந்திய விண்வெளி சாதனை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக, முதல்முறையாக தனியார் துறையினர் வடிவமைத்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட இருக்கின்றன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 என்ற ராக்கெட் மூலம் பிப்ரவரி மாதம் இவை ஏவப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானஇஸ்ரோசெய்து வருகிறது. இதை ஒரு சிறந்த திட்டமாக இஸ்ரோ கருதுகிறது. இதன் மூலம் பல தனியார் செயற்கைக்கோள்கள் நாட்டின் சேவைகளுக்காக விண்ணில் அனுப்பப்பட உள்ளன.

தற்போது பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோளை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. பிரேசில் தேசிய விண்வெளிஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த இந்த செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி51 ராக்கெட் மூலம் பிப்ரவரி இறுதியில்விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ராக்கெட்டில் இந்திய நிறுவனங்களான பிக்ஸல் ஸ்டார்ட் அப் மையத்தின்ஆனந்த்’, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின்சதிஷ்’, பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின்யுனிவ்சாட்ஆகிய 3 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சந்திரயான்– 3 செயற்கைக்கோளுடன் தலா ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றுடன் உந்துவிசை கருவியும் சேர்த்து விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பணியாற்றுவதற்கான குழுவும் உருவாக்கப்பட்டு பணிகள் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பெரும்பாலான வடிவமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. இதுதொடர்பாக நடப்பாண்டு பலவிதமான சோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன. விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டனர்.

அவர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி, ரஷிய நாட்டில் அளிக்கப்படுகிறது. முதல் ஆளில்லா ககன்யான் செயற்கைக்கோள் திட்டத்தை நடப்பாண்டே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பெரிய திட்டங்கள், இஸ்ரோவின் மற்ற செயல்பாடுகளைப் பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 25-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் பூமி கண்காணிப்புக்கான 30 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!