திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கொள்ளை கும்பலை துரத்திய கும்பல் அவரை வெட்டிக் கொன்றது.
திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் டிஐஜி உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.