பெரியகுளத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. பெரியகுளம் சரக காவல் உட்கோட்டத்தைச் சார்ந்த பெரியகுளம் காவல் நிலையம், தென்கரை காவல் நிலையம், தேவதானப்பட்டி காவல் நிலையம் மற்றும் ஜெயமங்கலம் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விதத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில் தேனி மாவட்ட கூடுதல் பயிற்சி கண்காணிப்பாளர் திரு.அருண்கபிலன்,பெரியகுளம் சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.முத்துக்குமார், தென்கரை காவல் ஆய்வாளர்கள் திரு.ஜோதிபாபு, திரு.சுகுமாறன், பெரியகுளம் காவல் ஆய் வளர் திரு.சுரேஷ், தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. குரு வெங்கட்ராஜ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Translate »
error: Content is protected !!