பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு..!

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவல் எதிரொலியாக பெரிய கடைகளை மூட ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சில மாவட்ட ஆட்சியர்களுக்கு எந்தெந்த கடைகளை மூடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!