போலீஸ் கமிஷனர் அலுவலக அமைச்சுப்பணியாளர்களுக்கு கேடயம் வழங்கிய கமிஷனர்

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை, சிறப்பாகவும், தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார் .

சென்னை பெருநகரில் மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அதன்பேரில் கடந்த அக்டோபர் மாதம் 2020 பணியிட அலுவலகத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த பொதுப்பிரிவு -2 அலுவலக கண்காணிப்பாளர் மகாலட்சுமி, இளநிலை உதவியாளர் வெங்கடேசன், கணிணி விவர பதிவாளர் ஜித்தேந்திரகுமார் ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ. 2000- மற்றும் வெற்றியாளருக்கான சுழல்கோப்பையை கமிஷனர் வழங்கினார்.


2வது பரிசிற்காக கட்டிட பிரிவு-3 அலுவலகத்தை தேர்வு செய்து கண்காணிப்பாளர் அன்பரசி, இளநிலை உதவியாளர் கதிர்வேலு மற்றும் இளநிலை உதவியாளர் வெங்கடேசன் ஆகியோருக்கு ரொக்கப்பரிசாக ரூபாய் 1,000/- மற்றும் சுழல்கோப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் திரு.ஏ.அமல்ராஜ், இ.கா.ப, (தலைமையிடம்) இணை ஆணையாளர் திருமதி.மல்லிகா, இ.கா.ப, துணை ஆணையாளர் திரு.பெரோஷ்கான் அப்துல்லா, (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

Translate »
error: Content is protected !!