போலீஸ் கமிஷனர் வெளியிட்ட காக்கும் காவலன் பாடல் இசைத்தட்டு

தமிழகத்தில் வீர வணக்கநாளை முன்னிட்டு தனியார் நிறுவனமும், சென்னை நகர மக்கள் தொடர்பு அலுவலகமும் இணைந்து தயாரித்த காக்கும் காவலன் இசைத்தட்டு சிடியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார்.

சென்னை நகர காவல்துறை- காவலர் வீர வணக்க நாள் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது.  இதன் ஒரு நிகழ்ச்சியாக சென்னை பெஸ்டி புரொடக்சன்ஸ் நிறுவனத்தினர் சென்னை நகர காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலகம் உடன் இணைந்து “காக்கும் காவலன்” என்ற பாடல் இசைத்தட்டை தயாரித்துள்ளனர். இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அந்த இசைத்தட்டின் பாடல்வரிகள் காவல்துறையில் பணியின்போது வீரதீர தியாகங்கள் செய்து உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் பேரிடர் காலங்களிலும் அயராது பொதுமக்களை காக்கும் நோக்கோடு பணி செய்து வரும் காவல்துறையினர் மற்றும் அவர்களுடன் உடனிருந்து வழிநடத்தும் காவல் அதிகாரிகளையும் பாராட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இந்த சிடியை வெளியிட பெஸ்டி புரொடக்ஸன் நிறுவனத்தை சார்ந்த ராஜேஷ் மோகன், ஜீசஸ் ராஜ்குமார், ஜெர்ரி பிராங்கிளின் உடன் இருந்தனர்.

Translate »
error: Content is protected !!