போலீஸ் கேன்டீனை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கேன்டீனை நேரில் பார்வையிட்டு உணவு வகைகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் போலீஸ் கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள், அமைச்சுப்பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் உணவு உண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (05.01.2021) காலையில் போலீஸ் கேன்டீனை பார்வையிட்டு ஆய்வு செய்து உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றும்படி அங்கு பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது கமிஷனருன் நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர் ஸ்ரீதர்பாபு, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், உணவக ஊழியர்கள் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!