மகளை காப்பாற்றசென்ற ஐடி நிறுவன ஊழியர் கடல் அலையில் சிக்கி பலி

சென்னை பெசன்ட் நகர் கடலில் சறுக்கு விளையாடிய மகள் கடலில் மூழ்கிய போது அவரைக் காப்பாற்ற சென்ற ஐடி  நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி இறந்தார்.

சென்னை, பெசன்ட்நகர் வண்ணாந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 55). ஐடி நிறுவன ஊழியர். இவரது மகள் ரேவதி (வயது 11). நேற்று முன்தினம் பெசன்ட் நகர் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை ரேவதியை இழுத்துச்சென்றது. இதனைக்கண்ட பாலாஜி தனது மகளை காப்பாற்றுவதற்காக  காப்பாற்ற கடலுக்குள் சென்றார். அப்போது பாலாஜி கடல் அலையில் சிக்கி மாயமானார். அது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். இந்நிலையில் பாலாஜியின்
பிரேதம் நேற்று காலை 9 மணியளவில் திருவான்மியூர், நியூ பீச் என்ற இடத்தில் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு  போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரேவதி என்ன
ஆனார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!