மசாஜ் பார்லர் பெயரில் பலான தொழில்: மேலாளர் கைது: 3 அழகிகள் மீட்பு

மசாஜ் பார்லர் பெயரில் விபசார விடுதி நடத்திய நபரை சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து 3 அழகிகளை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை, திருவான்மியூர் பகுதியில் மசாஜ் பார்லர் ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக அடையாறு துணைக்கமிஷனர்
விக்ரமனின் பொதுமக்கள் உதவி எண்ணுக்கு (8754401111) ரகசிய தகவல் வந்தத. அதன்பேரில் விக்ரமனின் தனிப்படை
இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம், எஸ்ஐ செல்வகுமார் தலைமையில் காவலர்கள் வெங்கடேசன், பூர்ணகுமார், சண்முகம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். இதில் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர், 6வது குறுக்குத் தெருவில் ஓசன் யூனிசெக்ஸ் ஸ்பா என்ற பெயரில் பார்லர் மற்றும் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது தெரியவந்தது.

அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் அங்கு கண்காணித்த போது 1 நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்ற வகையில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதற்கு மூன்று பெண்களை பார்லரில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி  அழைத்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஸ்பாவில் அதிரடி ரெய்டு நடத்தி அங்கிருந்த 3 பெண்களையும்  மீட்டு அரசுக்காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த விடுதி மேலாளர் பாலாஜி (வயது
31) என்பவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். ஸ்பா என்ற பெயரில் விபசாரத்தொழிலில் ஈடுபட்ட நபரை கைது செய்த நபரை கைது செய்த தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!